அதிரடிப்படை என்று தொழிலதிபரின் காரில் சோதனையிட்டு, ரூ.1.70 கோடி பணத்தை பறித்துச் சென்ற மோசடி கும்பல் சிக்கியது.
பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை , போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முறையான ஆவணமில்லாதவற்றை பறிமுதல் செய்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கி சோதனை என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலும் சில இடங்களில் கைவரிசை காட்டுகிறது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் காரில் வந்தபோது அவரை 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்தது. மேலும் தங்கள் அதிரடிப் படையினர் என்று கூறிய அந்த கும்பல் தொழிலதிபரின் காரை சோதனையிட்டு அவர் கொண்டு வந்த ரூ 1.70 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். சநதேகமடைந்ததொழிலதிபர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தில் அந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1.26 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.