பல்வேறு மாநில ஆளுநரை மாற்றி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்த்துள்ளார்.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநில ஆளுநர்களை மாற்றி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்து வந்த ஆனந்திபென் படேல் உத்தரபிரதேச மாநில ஆளுநராகவும், பீகார் மாநில ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்திய பிரதேச மாநில ஆளுநராகவும் மாற்றம்ப்பட்டுள்ளனர்.

மேலும் மேற்கு வங்காள மாநில ஆளுநராக ஜகதீப் தாங்கரும் , பீகார் மாநில ஆளுநராக பிரகு சவுகானும் , நாகலாந்து மாநில ஆளுநராக ரவியும் , திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பயாஸ் புதிய ஆளுநராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.