பேசிட்டு இருந்த திமுக செயலாளர்…! கத்தியால் குத்தி கொன்ற பிரகாஷ்… நாமக்கல்லில் பரபரப்பு சம்பவம் …!!

தி.மு.க. வார்டு செயலாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர்  குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் தி.மு.க செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு தனது நண்பர்களுடன் சரவணன் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அங்கே வந்து  திடீரென சரவணனை கீழே தள்ளிவிட்டு கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை  சரமாரியாக தாக்கினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணனின் நண்பர்கள் பிரபாகரன் , முரளிதரன் இருவரும் பிரகாஷை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் அவர்கள் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றான். பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முரளிதரன் மற்றும் பிரபாகரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சரவணனுக்கும் கொலையாளி பிரகாஷுக்கும் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு  காரணமாக பிரகாஷ் சரவணனை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே காவல்துறையினர்  இந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பிரகாசை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.