படுக்கையில் சிறுநீர் கழிப்பது பரம்பரை வியாதி என்று கூறப்பட்டுள்ளது.
படுக்கையில் சிறுநீர் கழிப்பது தொடர்பான ஆய்வு தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், இரவில் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது பத்து, பதினைந்து வயதை தாண்டியும் தொடர்ந்தால் அதனை பெற்றோர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அது அவர்களது உடல் நலத்திற்கும் நல்லது அல்ல.
அவரை சுற்றியுள்ளவர்களும் நல்லது கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் வியாதி பெரும்பாலும் பரம்பரை காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பெற்றோர்களில் ஒருவருக்கு மட்டும் அந்த வியாதி சிறுவயதில் இருந்திருந்தால் 30 சதவிகிதமும், இருவருக்குமே இருந்திருந்தால் 70 சதவிகிதமும் கண்டிப்பாக பரம்பரை காரணமாக அந்த குழந்தைக்கும் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.