மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. அன்றைய நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அதிகாரி அளித்த உத்தரவு…!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, வருகிற ஏப்ரல் 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாளில் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியார் மதுக்கூடங்கள் ஆகியவற்றை மூடி வைக்க வேண்டும் என மதுவிலக்கு ஆயத்த தீர்வைத் துறை ஆணையர் கூறியுள்ளார். மேலும்  அதையும் மீறி, கள்ளத்தனமாக மதுபானம் விற்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.