திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்த பின், இதில் நிலஅபகரிப்பு, பண மோசடி, பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் அதிகமாக இருந்தது. மேலும் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.