மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்…. வெளியான தகவல்….!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கிய இந்த முகாமில், பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மையை மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். இந்த முகாமில் மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டைக்கான பதிவும் செய்யப்பட்டு, தகுதியுடைய 212 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.