பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பாராளுமன்ற தேர்தல், 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகியுள்ள ஓட்டுக்கள் நாளை மே 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.இதனால் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
