குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சுடலை- சசிகலா. சுடலை கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுடலைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு காரணமாக சசிகலா தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று காலை சசிகலா தனது கணவர் வீட்டிற்கு வந்த போது சுடலை தங்கியிருந்த அறையின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. எனவே அவர் சமையலறைக்கு சென்று ஜன்னல் வழியே பார்த்துள்ளார். அங்கு சுடலை தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார் . இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுடலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.