வேலூரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வேட்மனு தாக்கல் இன்று முதல் நடைபெற இருக்கிறது.
வேலூரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலானது ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் A.C.சண்முகம் இன்றும், திமுக சார்பில் போட்டியிட உள்ள கதிர் ஆனந்த் நாளையும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.இதையடுத்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரத்திடம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.