கிடைத்த ரகசிய தகவல்… சிக்கிய அதிர்ச்சி பொருள்… பிரேசில் பயணியை சுற்றி வளைத்த போலீஸ்..!!!

85 கொக்கைன் கேப்சூல்களை கடத்தி வந்த பிரேசில் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிரேசில் இருந்து வரும் விமானத்தில் பயணி ஒருவர் போதை பொருள்கள் கடத்தி வருவதாக டெல்லி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணி 85 கொக்கைன் கேப்சூல்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட பிரேசில் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Leave a Reply