தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தலின் வேட்புமனுக்கல் மீதான பரிசீலனை இன்று தொடங்குகின்றது .
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகின்றது . இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று நேற்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது . அதிமுக கூட்டணி , திமுக கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் , மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் , சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர் . கடைசி நாள் வரை தமிழகம் முழுவதும் ஆண்கள் 1385 பேர் , பெண்கள் 171 பேர் , மூன்றாம் பாலினத்தவர்2 பேர் என மொத்தம் 1, 558 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் .

அதேபோல் நடைபெற இருக்கும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் 508 வேட்புமனுத்தாக்கல் பெறப்பட்டன . பெறப்பட்ட வேட்புமனுக்கல் மீதான பரிசீலனை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெறுகின்றது . இதையடுத்து வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற மார்ச் 29ஆம் தேதி கடைசி நாள் ஆகும் . அத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 29ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது .இன்று காலை முதல் தொடங்கி மாலை வரை வேட்புமனு தாக்கல் பரிசீலனை நடைபெறும்.