
கர்நாடகா மாநிலத்தில் உள்ள காளி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் பூசாரிகள் உண்டியல் பணத்தை திருடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கோவில் பூசாரிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து பணத்தை திருடியது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் வைத்தால் இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும் என்ற கருத்து பல இடங்களில் பரவியுள்ளது. இந்த விவகாரம் ஒரு வருடம் முன்பு நடந்தது என கோவில் தலைமை அர்ச்சகர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
திருட்டு சம்பவத்திற்கு பிறகு, இரண்டு செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சமையல்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நன்கொடைகளை எண்ணும் பணியில் மாணவர்களையும் பணியாளர்களையும் ஈடுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்கள், ஆஞ்சநேயர் சுவாமிக்கு காணிக்கை செலுத்தும்போது பயப்பட தேவையில்லை என்றும், காணிக்கைகள் பாதுகாப்பாக இருக்கும் எனவும் அவர் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த முயற்சிகள் கோவிலின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ராமச்சந்திரன் தெரிவித்தார்.
This is why Government should handover the administrative duties to the temples..
Here in GaaLi Anjaneya Swamy Temple, Bengaluru, administration staff is pocketing money while it’s counted.. and after few seconds picked up another bundle and handing it over to another guy.. Shame pic.twitter.com/fI1RF27Dyx— 𝑺𝒉𝒂𝒔𝒉𝒂𝒏𝒌 𝑰𝒚𝒆𝒏𝒈𝒂𝒓 (@IyengarShashank) September 27, 2024