பொள்ளாச்சி வழக்கு புதிய அரசாணை…… தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!

பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு C.B.I விசாரணைக்கு உத்தரவிட்டடு அரசனை வெளியிட்டது . அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்கள் இடம்பெற்றதை கண்டித்து பல்வேறு கண்டனக்குரல்கள் எழுந்தன . மேலும்  பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியாவதை தடை செய்யவும் ,   பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ , ஆடியோ உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியிட தணிக்கை முறை தணிக்கை முறையை கொண்டு வரக்கோரி திருச்சியை சேர்ந்த இளம் முகில்  என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் .

Image result for tn government and madurai court

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருப்பது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தவறானது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள் , இந்த அரசாணையை திரும்பப் பெற்று பெயரில்லாமல் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர் . மேலும் பொள்ளாச்சி பாலியல் வீடியோக்களை இணையத்தில் இருந்து தடை செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டதோடு சமூக ஊடகங்கள் நன்மை தீமைகள் குறித்து பள்ளி கல்லூரிகளில் பாடங்களில் கொண்டு வரலாம் என்றும் யோசனை தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர் .