திருப்பூர் டைமன் தியேட்டர் அருகே 100 அடி உயரத்தில் உயர்மின் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் நேற்று காலை 6:00 மணி அளவில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மேலே ஏறியுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து சத்தம் போட்டு கீழே இறங்குமாறு கூறியும் கேட்காமல் உயர்மின் கோபுரத்தின் உச்சியை நோக்கி அந்த வாலிபர் ஏறிக்கொண்டிருந்தார். இது குறித்து திருப்பூர் தெற்கு காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயர்மின் கோபுரத்தின் மின்சாரத்தை நிறுத்தினர். மேலும் காவல்துறையினர் வாலிபரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். ஆனால் யாராவது மேலே ஏறி வந்தால் கீழே குதித்து விடுவதாக அந்த வாலிபர் மிரட்டியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த வாலிபரை கீழே இறங்கி உள்ளார். இதனையடுத்து நடத்திய விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியில் சேர்ந்த ரமேஷ் என்பதும், திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள உறவினரின் ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து பார்த்து தெரியவந்தது.
அதோடு ரமேஷின் தங்கை திருமணம் நேற்று முன்தினம் மதுரையில் நடந்துள்ளது. பின்னர் அங்குள்ள மண்டபத்தில் ரமேஷை வைத்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு குடும்பத்தினர் சென்றுள்ளனர். இதில் தன்னை அழைத்து செல்லாமல் விட்டு விட்டு சென்றதால் கோபமடைந்த ரமேஷ் அங்கிருந்து திருப்பூர் புறப்பட்டு வந்து உயர்மின் கோபுரத்தில் ஏறினார் என்பது விசாரணையின் போது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன் பிறகு திருப்பூரிலுள்ள உறவினரை அழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.