உங்கள கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு: திமுகவினர் மீது சீமான் ஆவேசம்!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக பேனாச்சின்னம் அமைப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கடும் அமலி ஏற்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேச எழுந்தபோது எதிர் தரப்பான திமுகவினர் கூச்சலிட்டதால் அவர் மேடையிலே தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை குண்டு கட்டாக அப்புறப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னத்துக்கு நாங்கள் எதிர்க்கவில்லை. அதை கடலுக்குள் வைக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். எங்க வேணாலும் வைங்க. கடலுக்குள்ள வைக்கக்கூடாது. அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வரும் என்றால். உடனே திமுகவினர் கூச்சலிடவே…  நீங்க கத்துகின்றீர்களே உங்களுக்கும் சேர்த்து தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். 8,551.13 சதுர மீட்டரை நீங்க எடுக்குறீங்க.

கடற்கரையில்  இருந்து உள்ளே போயி நீங்க பேனா வைக்கணும்னா.. கல்லை கொட்டணும், மண்ணை கொட்டணும். அது அழுத்தம் வரும். அதனால அங்கே இருக்கின்ற பவள பாறை  பாதிக்கப்படும் என பேசினார்.  உடனே மீண்டும் திமுகவினர் கூச்சிலிடவே…. உனக்கு எத பத்தி அக்கறை இருக்கு. உங்கள கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு. நீ இங்க பேனைவை வச்சு பாரு. பேனாவை ஒரு நாள் நான் வந்து  உடைக்கிறேனா  இல்லையா ?  பாரு. கடலுக்குள்ள தான் வைக்கணுமா ?

பள்ளிக்கூடத்தை  சீரமைக்க காசு இல்ல. பேனா வைக்க காசு எங்கிருந்து வருது ? அண்ணா அறிவாலயம் முன்னாடி வை.  நினைவிடம் கட்டி இருக்க அல்லவா? அங்க  போயி வை. கடலுக்குள்ள தான் வைப்பாங்களாம். 13 மீன்பிடி கிராமங்கள் பாதிக்கப்படுகிறது. என் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுது. சும்மா மீனவர் சங்கம்,  அனைத்து இந்தியா மீனவர் சங்கம்,  அகில இந்திய மீனவர் சங்கம் என வந்துட்டு,  அதனால ஒன்னும் பாதிப்பில்லை அப்படின்னு சொல்றது. சும்மா எதாவது பேசிட்டு இருக்கிறது என சீமான் ஆவேசமாக பேசினார். உடனே அங்கிருந்த திமுகவினர் போ, வெளியேறு என தொடர்ந்து கூச்சலிட, நீ போக சொன்னா நான் போயிடுவேனா ? நான் போக மாட்டேன் என  பேசினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.