பிரசித்தி பெற்ற ஆழி தேரோட்டம்… திருவாரூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!!!

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேரோட்டத்தை காண்பதற்கு திருவாரூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவாரூருக்கு வருகை தருகின்றனர். அதனால் ஏற்கனவே பொதுமக்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சார்பாக விழுப்புரம் மற்றும் திருச்சியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை, மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கும்பகோணம், நாகை, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் இருந்து மொத்தம் 44 சிறப்பு பேருந்துகள் திருவாரூருக்கு இயக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக பேருந்து தேவைப்பட்டால் அதற்கு தகுந்தார் போல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.