சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் சட்டவிரோதமாக பேனர் வைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் 23 வயதான சுபஸ்ரீ சாலையின் நடுவே வைக்கப்பட்ட பேனர் அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து கட் அவுட், பேனர் வைக்க வேண்டாம் என தமிழக அரசியல் கட்சிகள் அறிவுறுத்தியுள்ளன.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் சட்டவிரோதமாக பேனர் வைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2018 ஜூன் மாதத்திலேயே பேனர் வைக்க கூடாது என அறிவிப்பு வெளியிட்டதாக திமுக விளக்கமளித்துள்ளது. சட்ட விரோத பேனர்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை திமுக முறையாக பின்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.