ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று நேரில் சந்தித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல்விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 4 முதல் 5 மாதங்கலே இன்னும் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசியல் தேர்தல் களம் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கினர்.
இதில் முன்னணி கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஒருவருக்கு ஒருவர் எதிர்க்கட்சியின் குற்றங்களை கூறிக்கொண்டே வருகின்றனர். இதனால் இரு கட்சிகளும் இடையே மிகவும் கடுமையான போட்டி நிலவுகிறது.இதில் அதிமுக, திமுக மீது 2ஜி வழக்கில் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தது. திமுக, அதிமுக மீது துறை ரீதியாக டெண்டர் முறைகளில் ஊழல் நடைபெறுவதை சுட்டிக்காட்டியுள்ளது.
இதை தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக அரசின் மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மனு ஒன்றை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.