சமைக்க தேவையன பொருள்:
மட்டன் – 1/2 கிலோ,
தக்காளி – 2,
பெரிய வெங்காயம் – 2,
நெய் – 3 டீஸ்பூன்
டால்டா – 3 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1/4 கப்,
ஏலக்காய் – 2,
தயிர் – 1 கப்,
எலுமிச்சம் பழம் – 1/2 மூடி,
கிராம்பு – 2,
மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி,
பட்டை – சிறிது,
சீரக சம்பா அரிசி – 1/2 கிலோ,
உப்பு – தேவையான அளவு

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கொள்ளவும்.
Step 2.
பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிகொள்ளவும்.
Step 3.
வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் , மட்டன் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழ சாறு சேர்த்து,
Step 4.
தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியைப் போடவும். அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். அரிசி வெந்ததும் நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்.
சூடான சுவையான மட்டன் பிரியாணி தயார்.