சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து இயக்கயிருக்கிறார். இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது இவர் அனைத்து பாடல்களையும் முடித்துக் கொடுத்துள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் கேட்ட சூர்யா, ஜி.வி.பிரகாசை வெகுவாகப் பாராட்டியதோடு மட்டுமில்லாமல் அவருக்கு ஒரு பெரிய பூங்கொத்து ஒன்று அனுப்பி வைத்த அதில் ஜிவி ப்ரோ, பாடல் கேட்டு மெய்சிலிர்த்துவிட்டேன். அட்டகாசமான பாடல்கள் என்று தன் கைப்பட எழுதியிருக்கிறார். இதனை ஜி.வி.பிரகாஷ் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.