திமுக எங்களை தொழு நோயாளி போல நடத்துகின்றது என்று கூறி பெருந்தலைவர் மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பி.ஜே.பி , பா.ம.க , தே.மு.தி.க , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் , தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றது . இந்நிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் N.R தனபாலன் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் .

அப்போது அவர் கூறுகையில் , பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் வெற்றிக்கு முழுமையாக உழைப்போம். வரவிருக்கின்ற 18 சட்டமன்ற தொகுதிகளில் எண்களின் ஆதரவு உண்டு என்ற கடிதத்தை முதல்வரிடமும் , துணை முதல்வரிடமும் அளித்தோம் என்றார் . மேலும் பேசிய அவர் , நாங்கள் தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தோடு பயணித்துக் கொண்டிருந்தோம் . தற்போது எங்களை எல்லாம் தொழு நோயாளி போல தனியாக மேடை அமைத்து நடத்துகின்றார்கள் . கூட்டணி தொடர்பாக எங்களிடம் அவர்கள் பேசவில்லை , எந்தவிதமான தொடர்பும் கொள்ளவில்லை என்று தெரிவித்தார் .