எல்லை தாண்டி வந்த இலங்கை வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கே தமிழக எல்லை அமைந்துள்ளது. இங்கு இலங்கையை சேர்ந்த சாந்தரூபன் என்பவர் படகில் வந்து கொண்டிருந்தார். இவரை இந்திய கடலோர காவல் படையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல்படை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின்படி காவல்துறையினர் ஒரு படகில் சென்று சாந்தரூபனை கைது செய்து அவருடைய படகையும் பறிமுதல் செய்து கரைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் எல்லையை தாண்டி வந்த இலங்கை வாலிபர் சாந்த ரூபனை கைது செய்து அவர் மீனவரா அல்லது அகதியா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.