காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் வால்விலிருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தை அடுத்துள்ள காவனூர் எனும் பகுதியில் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் காவிரி கூட்டுக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் பல லட்சம் அளவிலான நீர் வெளியாவதாகவும் பலமுறை புகார் அளித்தும் மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாதத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்று நீர் நிரம்பி பல லட்சம் லிட்டர் அளவில் தண்ணீர் வீணாவதாகவும். குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் வீணாகும் குடிநீரை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.