தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்தின் கீழ் முனைவோர் சிறப்பு திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு செயல்படுத்தி வரும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ் மானியம் பெறுவதில் எஸ்சி, எஸ் டி பிரிவு தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன் திட்டத்தினை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள புதிய தொழில் முனைவோர் முன் மொழியும் நேரடி வேளாண்மை தவிர்க்க உற்பத்தி வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்திற்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ஆயத்த ஆடைகள் தைத்தல், செங்கல், கயிறு மற்றும் கயிறு நார் சார்ந்த பொருட்கள், உணவு பதப்படுத்துதல், வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, மளிகை கடை, அழகு நிலையம் உடற்பயிற்சி கூடம் உட்பட பல்வேறு தொழில் திட்டங்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. மானிய உச்சவரம்பு ரூ.1.5 கோடியாகும். மேலும் கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் ஆறு சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு மானியம் உண்டு. அதேபோல் இந்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35% அரசின் பங்கான முன்முனை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்பம் உள்ளவர்கள் எஸ்சி மற்றும் எஸ்டி தொழில் முனைவோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகம் சிவகங்கை என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04575-240257,8925533989 என்ற தொலைபேசி எண்ணுள்ள தொடர்பு கொண்டு கூறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.