தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான மே மாதம் முடிந்த பிறகு வெயிலுக்கு சூட்டை தணிப்பது போல் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்கிறது. இந்த மழையினால் பசுமை இந்தியாவில் உள்ள அணைகள் நிரம்பி வழிகிறது.
