குடும்பத் தகராறில் தந்தை தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியிலுள்ள வீரம்பட்டினத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி கடலூரிலும் 2-வது மனைவி வீரம்பட்டினத்திலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2-வது மனைவியின் மகன் தினேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு 2 குடும்பம் என்பதால் அடிக்கடி பிரச்சனைகள் இருந்து வந்தன. இதனையடுத்து 2-வது மனைவியின் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏன் இப்படி அடிக்கடி சண்டை போடுகின்றாய் என்று தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியை தினேஷ் தாக்கியுள்ளார். எனவே ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி கத்தியை எடுத்து தனது மகன் தினேஷ் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சரிந்து கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி தனது மகனை கத்தியால் குத்தி விட்டதால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது பற்றி பொதுமக்கள் அரியாங்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய கிருஷ்ணமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.