சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி: போட்டிகள் ரத்தானதால்….ஒலிம்பிக் வாய்ப்பை இழக்கும் சாய்னா ….!!

அடுத்த மாதம் நடைபெற  இருந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது .

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, அடுத்த மாதம் ஜூன்  1 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை  நடைபெற திட்டமிடப்பட்டது .  தற்போது அங்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ,இந்த போட்டியை ஒத்திவைப்பதாகவும்,அதோடு மாற்று தேதியில் போட்டிகள் நடைபெறாது என்று ,சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் சார்பில் நேற்று அறிவிக்கப்ட்டது  .இந்த போட்டியானது ஒலிம்பிக்  போட்டிக்கு ,தகுதி பெறுவதற்கான  கடைசி சுற்று போட்டியாகும் . இதனால் இந்தப் போட்டியில் பங்கு பெற்று, தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

இதற்கு முன்பே இந்திய மற்றும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் , தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போது சிங்கப்பூர் ஓபன் போட்டியும் நடைபெறாததால் ,நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு மிகப்பெரிய பின்னைடவு ஏற்பட்டுள்ளது . ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு  இந்திய அணி பேட்மிண்டனில்  பி.வி.சிந்து, சாய் பிரனீத் மற்றும் ஆண்கள் இரட்டையர் ஜோடி பிரிவில்  சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர் .