திருவாரூரில் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் கருத்தரங்கம்….!!!!!

தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள், நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து  நடந்த கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி மற்றும் கவிதை ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கருத்தரங்கில் அயோடின் உப்பு கண்டறியும் பரிசோதனை முறை, கலப்படத்தை கண்டறிவதற்கான காபித்தூள் மற்றும் மஞ்சள் தூள்களை பார்வைக்காக வைத்திருந்தனர்.