பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆண்டாள் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த சபரி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சபரி சரியாக படிக்காமல் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததால் அவனது தந்தை சரவணன் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சபரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.