கேரளாவை வச்சு செய்ய போகும் மழை…. “இன்றும் ரெட் அலர்ட்” எச்சரிக்கை …!!

கேரளாவுக்கு இன்று ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எட்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.

Image result for kerala rain news today in tamil

அதே போல அங்கு கொட்டித்தீர்த்த கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும்  பலியானோர் எண்ணிக்கை 92 ஆக  அதிகரித்துள்ளது. 2.26  லட்சம் மக்கள் அங்குள்ள 1,239 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல இடுக்கி, திரிசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர், கசர்கோட் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் மீட்புப்பணி பேரிடர் படையினர் தயாராக இருக்கின்றனர்.