தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோவிலான சாரங்கபாணி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் கும்பகோணத்தை அடுத்த சேஷம்பாடி ஊராட்சி முப்பகோவில் பகுதியில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்தபோது இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நிலத்தை மீட்டு கோவில் நிர்வாகம் கையகப்படுத்த முடிவு எடுத்துள்ளது.
அந்த வகையில் சிவசங்கரி, பிரபாகரன், கணேஷ் குமார் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் ரேணுகா ஆகியோர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியுள்ளனர். அந்த நிலத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையை வைத்தனர். இந்நிலையில் நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்த நிலையில் அதிகாரிகள் அங்கு தடுப்பு வேலிகளை அமைத்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத விதமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.