சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே விளக்கமளித்துள்ளார்.
12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 55 பந்துகளில் 102* ரன்கள் (4 சிக்ஸர், 10 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ரஹானே 49 பந்துகளில் 70 ரன்கள் (3 சிக்ஸர், 4 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 16*(9) சன்ரைசர்ஸ் அணியில் ரஷித் கான், விஜய் சங்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19 ஓவரில் 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 69 ரன்கள் (9 பவுண்டரி, 2 சிக்ஸர்) மற்றும் பேர்ஸ்டோவ் 28 பந்துகளில் 45 ரன்கள் குவித்தனர். விஜய் சங்கர் 33 (15) ரன்கள் குவித்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து தோல்வி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே தெரிவித்ததாவது, நாங்கள் சிறப்பாக விளையாடி 198 ரன்கள் குவித்தோம். இது இந்த ஆடுகளத்தில் ஒரு நல்ல ஸ்கோர். ஆனால் நாங்கள் வார்னரின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த தவறவிட்டோம். எங்களது பந்துவீச்சாளர்கள் செய்த ஒரு சிறிய தவறால் அவர் அதிரடியாக விளையாடி விட்டார். இது எங்கள் அணிக்கு தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பவர்பிளேயை நன்றாக பயன்படுத்தி ஆட்டத்தை அவர்களுக்கு சாதகமாக மாற்றிவிட்டனர்” என அவர் கூறினார்.