உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து இன்று பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகின்றார்.
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து வீராங்கனை பி.வி சிந்து_க்கு மத்திய அமைச்சர்கள் , மாநில முதல்வர்கள் , விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பி.வி சிந்து பிரதமர் மோடி , மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சந்தித்து வாழ்த்து பெற இருக்கின்றார். ஏற்கனவே பிரதமர் மோடி பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கும் ஊக்கமளிப்பதாக அமையும் என்று ட்வீட்_டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.