“5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு பல புதிய திட்டங்கள்” தொடங்கிவிட்டோம் பிரதமர் மோடி உரை ..!!

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களை செய்ய தொடங்கிவிட்டோம் என்று பிரதமர் மோடி உரையாற்றினார். 

இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி, பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி 7: 30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார்.

Image

இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். புதிய அரசு பதவியேற்ற 10 வாரங்கள் கூட முடியாத நிலையில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். குறிப்பாக ஜம்மு- காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது. நாம் சுதந்திரதின விழா கொண்டாடி வரும் நிலையில் ஒரு சில மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

Image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். விரைவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களை செய்ய தொடங்கிவிட்டோம். ஒரே நாடு, ஒரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம்.

Image

மேலும் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது “நீரின்றி அமையாது உலகு” என தமிழில் திருக்குறளை மேற்கோள் காட்டி நாட்டு மக்களுக்கு உணர்த்தினார். ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரவேண்டும். வீடுகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்காக வரும் ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி செலவிடப்படும். என தெரிவித்தார்.