‘ஒரே தேர்தல் முறை’ அனைத்து கட்சித்தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை…..!!

ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் தலைமையில் ஆலோசனை நடத்த இன்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற காரணங்களை முன்வைத்து ஒரே தேர்தலை நியாயப்படுத்தி வருகின்றது மத்திய பாஜக அரசு.

அனைத்து கட்சித் தலைவர்களுடன் பிரதமர் க்கான பட முடிவு

இந்நிலையில் ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு  அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர்  பிரகலாத் ஜோ‌ஷி அழைப்பு விடுத்துள்ளார்.