இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் தான் பிரதமராக இருந்தபோது கொரோனா விதிமுறைகளை மீறி அரசு மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களுக்கு கூட்டம் நடத்தி விருந்தளித்துள்ளார். இது தொடர்பான புகார் பூதாகரமாக வெடித்தது. இதனால் அவர் பதவியை இழக்க நேரிட்டது. இது தொடர்பான வழக்கு நாடாளுமன்ற பொது சபை சிறப்பு உரிமை குழு விசாரித்து வருகின்றது.
இந்த நிலையில் போரிஸ் ஜான்சனிடம் சிறப்புரிமை குழு நேற்று முன்தினம் விசாரணை நடத்தியுள்ளது. அதில் அவர் கூறியதாவது “அப்போதைய சூழ்நிலையில் இரண்டு மூத்த அதிகாரிகள் கட்சியிலிருந்து விலகுவதாக கூறினார்கள். இதனால் கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நான் நாட்டை கவனக்குறைவாகவும் தவறாகவும் வழி நடத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.