மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மருதூர் கீழத்தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சனா(23) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அஞ்சனாவுக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஞ்சனா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அஞ்சனாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply