கையில் ஏற்பட்ட காயம்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கல் மேலசக்கர பாளையத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்தசாமி நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவரது இடது கை எலும்பில் முடிவு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கந்தசாமி தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply