2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு…. தற்கொலைக்கு முயன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாலைப்புதூர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சௌமியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மிதுலா ஸ்ரீ(8) என்ற மகளும், மித்ரன்(5) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் சௌமியா எறும்பு பவுடரை தண்ணீரில் கலந்து தனது மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.