மதுரை மாவட்டத்திலுள்ள ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி முதல் தெருவில் முனியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் காயங்கள் இருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற முனியசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் முனியசாமியின் தந்தை பூபதி தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முனியசாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.