குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.புதுப்பட்டியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். ஆனால் மூர்த்தி தனது மனைவியை பார்க்கும் போதெல்லாம் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் வசந்தா தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது அங்கு வந்த மூர்த்தி அரிவாளால் தனது மனைவியின் காலில் வெட்டினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த வசந்தாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.