டாக்டர் ராதாகிருஷ்ணனின் முழு வாழ்க்கை வரலாற்றையும் கால அட்டவணையாக இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
காலவரிசை:
1888: திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார்.
1918: மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். 1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார்.
1923: அவரின் படைப்பான இந்திய தத்துவம் வெளியிடப்பட்டது.
1931: ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1939: பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார்.
1946: யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

1948: பல்கலைக்கழக கல்வி தலைவர் ஆகுமாறு இந்திய அரசு அவரை கேட்டு கொண்டது.
1949: சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார்.
1954: பாரத ரத்னா விருது பெற்றார்.
1962: இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1967: ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
1975: தனது 86வது வயதில் ஏப்ரல் 17 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்