அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள் பாண்டவர் அணியினருக்கு நடிகை ராதிகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு , இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு _ ள்ளார்கள். அதில் நடிகர் சரத்குமார் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றசாட்டை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக நடிகை ராதிகா வெளியிட்ட அறிக்கையில் , பாண்டவர் அணியினரை நோக்கி குறிப்பாக நடிகர் விஷாலுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதில் படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்து விட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே..? நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டோ..? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் , அவர் வெளியிட்ட அறிக்கையில் , உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும் போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா..? நடிகர் சங்க இன்றைய தலைவர் நாசர் எதைக்கேட்டாலும் அப்படியா இது எனக்கு தெரியாமல் நடந்து விட்டது என்று வழக்கம் போல் ஓடி ஒளிந்து கொள்வார். எனவே இனியாவது நீங்கள் அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள் என்று நடிகை ராதிகா சரத்குமார் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.