எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்!! பரபரப்பு கோரிக்கையால் அதிமுகவில் ஷாக்!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. தொடக்கம் முதலே திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் EVKS இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய சூழலில் அவர் அதிமுக வேட்பாளரை விட 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கின்றார்.

அதிமுகவின் இந்த படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவியையும்  ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.