பாகிஸ்தானுக்கு ஆப்பு ……. ”ஐநா தலையிட கூடாது”…. ரஷ்யா வேண்டுகோள் …!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலையிடக் கூடாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.

மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த 9_ஆம் தேதி  சீனாவுக்கு சென்று இந்தியாவுக்கு எதிராக ஆதரவு கோரினார். மேலும் பல்வேறு நாடுகளிடம் பாகிஸ்தான் முறையிட்டதோடு தங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியது. இதற்கான வேலையில்  அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஈடுபட்டு வருகின்றார்.

Image result for வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி சீன வெளியுறவுத்துறை அமைச்சர்

மேலும் காஷ்மீர் தொடர்பான பிரச்சனையை ஐ.நா விவாதிக்க வேண்டும் , இதில் ஐ.நா தலையிட வேண்டுமென்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஐ.நா கவுன்சிலின் தலைவர் ஜோயன்னா ரானெக்காவுக்கு கடிதம் எழுதினார். அதே போல பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

Image result for பாகிஸ்தான் ஐ நா

ஐ.நா_வின் மூடிய அறைக்குள் ரகசியமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த ஆலோசகராக இருக்கும் பிரிட்டன், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு  ஆகிய நாடுகளின் பிரநிதிகள் மற்றும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதில் ரஷ்யா ,  ஜம்மு விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என்றும் ,ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலையிடக்கூடாது   என்றும் தெரிவித்ததாக சொல்லப்படுகின்றது.