அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியில் கூலி தொழிலாளியான ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சுமதி அவரை பிரிந்து தனது பிள்ளைகளுடன் மணலூர் பேட்டையில் வசித்து வருகின்றார். இதில் மது குடிக்கும் பழக்கம் உள்ள ராமு தனது மகளைப் பார்த்துவிட்டு திரும்பி வந்துள்ளார்.
அப்போது சந்தமேடு பகுதியில் இவர் உயிர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராமுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமு அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்ததால் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.