பிரான்ஸ் நாட்டில் ஓய்வு பெறும் வயது 62 ஆக இருந்தது. இதனை இரண்டு ஆண்டுகளாக உயர்த்தி ஓய்வு பெறும் வயதினை 64 ஆக அந்நாட்டு அரசு மாற்றி உள்ளது. இது தொடர்பானது விவாதம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அந்த சமயத்தில் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் வாக்கெடுப்பு நடத்தாமல் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்றி உள்ளார்.
அதன் மூலம் ஓய்வுபெறும் வயது 64 ஆக சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் காவல்துறை வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காவல்துறையினர் பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்துள்ளனர்.