“தோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிடக் கூடாது ” சச்சின் கருத்து

தோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையீடக் கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

நடந்து வரும் உலகக்கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருந்த  இந்திய அணி உட்பட ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறன் பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி இந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இந்நிலையில் நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதிய அரையிறுதி போட்டியில் தோனி மற்றும் ஜடேஜா கடுமையாக போராடினர். இந்திய அணியின் விக்கெட்டுக்களை சிட்டுக்கட்டாய் சரிந்த போதும் தோனி நேர்த்தியாக விளையாடி ஜடேஜா அதிரடி ஆட்டத்ற்றத்திற்கு வழி  வகுத்தார்.  ஜடேஜா ஆட்டமிழந்ததும் தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்த தொடங்கிய தோனி துரதிஷ்ட வசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரின் அவுட்_டால் இந்தியா_வின் வெற்றி நழுவி போனது. தன்னுடைய முழு பங்களிப்போடு தோனி போராடியும் வெற்றி கிடைக்கவில்லை.

இதையடுத்து கிரிக்கெட் பயணத்தில்  தோனி தனது ஓய்வை அறிவிப்பார். இதோடு அவரின் ஆட்டம் முடிகின்றது என்ற கேள்வி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது. இது குறித்து பேசிய கோலி ஓய்வு குறித்து ஒரு போதும் தோனி தெரிவித்ததில்லை என்று கூறினார். மேலும் தோனியின் ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் , தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பம் நாம் அவரை நாம் யாரும் தலையிடக்கூடாது.அவரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை நாம் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் மேலும் அவர் முடிவெடுக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.