கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த தேவராஜ் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணைப் போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த சரவணன் கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார். நேற்று கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக சரவணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.